அணைக்கப்படாத கைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பன் ஒருவனைத் தொலைபேசியில் அழைத்தேன்.

நீ நலமா? நான் நலம்.

வாழ்க்கை எப்படி? அது சுகம். இங்கும் அதே.

வேலை எப்படி? எப்போதும் போல் நன்றாகவே செல்கிறது. இங்கும் அப்படியே.

பிள்ளைகள் வேகமாய் வளர்கிறார்கள். அதே அதே.

சென்னையில் மழை. பெல்கியத்தில் வெயில்.

சென்னை வந்தால் சந்திக்கவேண்டும். கண்டிப்பாய்.

அடிக்கடிப் பேசவேண்டும். இப்படியே.

விடைபெற்றுக்கொண்ட நண்பன் அழைப்பதுபோல் உணர்ந்து மீண்டும் கைபேசியை காதோடு அணைத்தேன்.

பதினைந்து நிமிடங்கள் அவன் சொல்லாத துயரங்களையும், மறைத்த வலிகளையும் மூன்று நிமிடங்களில் விரிவாக எடுத்துரைத்தது நண்பனின் அணைக்கப்படாத கைபேசி.

(முகநூல் நிலைத்தகவல்-18/10/2014)

கருத்துகள்

  1. வணக்கம் ஐயா..

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..