இடுகைகள்

ஜோ டி குருஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு..

படம்
அம்மாவின் தேன்குழல்: அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு - எழுத்தாளர் ஜோ டி குருஸ் ஒ ரு காலத்தில் ஜமீன்தார் பிள்ளைகளுக்கும் அதன் பின்னான காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே கிடைத்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு 90களில் நமது அடித்தள மக்களின் பிள்ளைகளுக்கும் மென்பொருள் துறைமூலம் வாய்த்தது. சமுதாயத்தின் மேலடுக்குகளில் உள்ளவர்களும் பயணித்தார்கள் ஆனால் வழக்கம்போலவே கிடைத்த வாழ்வைத் தூய்த்தார்களே அல்லாது புலம்பெயர் வாழ்வை, அதன் சூழலை, பொருளாதாரச் செழுமையை, சிக்கல்களை அதன் நிகழ் தருணங்களில் கிடைக்கும் தரிசனங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்ததில்லை. தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டுமே என்ற அவர்களின் வழக்கமான இயல்பு. அக்கறையான நமது பிள்ளைகள் புலம் பெயர்ந்தபோது அந்த வாழ்வுசார் புரிதலும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு மின்னெலென பளிச்சிடும் தரிசனங்களும் அதன் சுவராஸ்யங்களும் தமிழுக்கு கொடையாக கிடைத்துவிடுகின்றன. அப்படியானதொரு கொடையாகத்தான் தம்பி மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன்குழல் என்ற இந்தத் தொகுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாசிக...