ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்..
க டந்த வருடம் கோடை விடுமுறைக்கு தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத் தவிர. அவற்றிற்கு மட்டும் என்ன ஆனதோ? ஆனால், அவைகளிடம்தான் நானும் என் மகனும் அன்றாடம் மாலைவேளைகளில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குத் திரும்பியவுடன் முதலில் தோட்டத்திற்குத்தான் செல்வேன். 'Hey Boys!' என்றுதான் அவர்களை அழைப்பேன். அவர்கள் வளர வளர அவர்களோடு நானும் என் மகனும் செல்ஃபியெல்லாம் எடுத்திருக்கிறோம். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலையை பார்த்தவுடன் அனைவருமே வருத்தம் அடைந்தோம். 'My Boys!!' என்று சோக ஸ்மைலியோடு நண்பர்களுக்குச் செய்தி அனுப்பினேன். நண்பர்களுக்கும் காரணம் தெரியவில்லை. "தெரியவில்லை மேடி. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து நீரூற்றினோம். ஆனால் தக்காளிச் செடிகள் மட்டும் செத்துவிட்டது போல் தெரிகிற...