கடவுளைக் காண.. Reading between the lines..
ஞா யிறன்று மாலை பெல்கியத்தின் லிம்புர்க் மாகாணத்திலுள்ள பொர்க்லோன் என்கிற குறுநகருக்குச் சென்றிருந்தோம். லிம்புர்க் மாகாணத்தை பெல்கியத்திலேயே பழத் தோட்டங்கள் நிறைந்த வனப்பு மிகுந்த வளமான பகுதி என்று கூறலாம். இங்கு விளையும் பழங்கள் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வசந்த கால மாதங்களான மார்ச்சு மாதத்தில் தொடங்கி மேமாத இறுதி வரை ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் மரங்களில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறப் பூ க்கள் பூத்துக் குலுங்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதை என் மகன் மொழியில் கூறினால் உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும், 'அப்பா இந்த ப்ளேசை கட் பண்ணி கண்ணுக்குள்ள போட்டுக்கலாம் போல ப்யூடிபுளா இருக்கு பா' என்பான். லிம்புர்க் மாகாண பேரிக்காய்கள் ரஷ்யாவுக்கும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த வருடம் பெல்கிய பேரிக்காய்களுக்கு ரஷ்யா விதித்த தடையால் இங்குள்ள விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். பொர்க்லோன் நகருக்குச் சற்று வெளியே அமைந்த குன்றின் மீது 'Reading between the lines' என்று அழைக்கப்படும் ஒரு 'sea-through' தேவாலயத்தைக் கட்டியுள்...