சித்தார்த்தன்
மு ந்தைய நாள் இரவு வரை பித்துப் பிடித்தவன் போலிருந்த சித்தார்த்தன் காலையில் தெளிவுடன் அரசவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அவனருகே வந்த யசோதரையிடம், "உன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட எண்ணி இருந்தேன், யசோதரா." என்றான். "என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?" என்றாள் அதிர்ச்சியடைந்தவளாய் யசோதரா. சித்தார்த்தன் கடந்த சில தினங்களாகவே அவனுக்கு ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்களையெல்லாம் மெதுவாக விளக்கி, "இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு அவசியம் ஏதுமில்லைதான். ஆனால் நேற்று நள்ளிரவு படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்பதை நீ மட்டுமாவது நிச்சயம் தெரிந்துகொள்ளல் வேண்டும், யசோதரா". சித்தார்த்தன் கூறியதைக் கேட்டு உரக்கச் சிரித்தாள் யசோதரை. "ஏன் சிரிக்கிறாய் யசோதரா?" என்று மெல்லிய புன்னகையுடன் வினவினான் சித்தார்த்தன். "எத்தனையோ ஞானிகள் காடுகளிலும் மலை முலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், மரத்தடியிலும் தவம் செய்தும் கிட்டாத ஞானம் தங்களுக்கு மாத்திரம் படுக்கையிலேயே கிடைத்துவிட்டதை எண்ணிச் சிரித்தேன், ஸ்வாமி....