"இயக்குநருடன் ஒருநாள்" ஆவணப்படம்
அ ப்பாவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்பது என் வெகுநாள் கனாவாக இருந்து வந்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பொள்ளாச்சி பலூன் திருவிழாவுக் காக தாயகம் வந்தபோது அது சாத்தியமானது. ஆவணப்படம் எடுத்த அன்றைக்கு முந்தைய நாள் நள்ளிரவுதான் ஊருக்கு வந்தேன். அடுத்தநாள் பெயருக்கேற்றவாறு ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். படப்பிடிப்பு என்பது பெரிய சொல். கைப்பேசியைக் கொண்டு நானே பதிவு செய்தது. பயன்படுத்திய கிம்பலிலும் மோட்டார் பிரச்சினை இருந்தது. சரியாக வேலை செய்யவில்லை. மைக் எதுவும் பயன்படுத்தவில்லை. பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை. மனைவி ப்ரி யாதான் கேள்விகளைக் கேட்டாள் . என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை விமானத்தில் தாயகம் வரும் போது ப்ரியாவும் நானும் பேசிக் குறிப்பெடுத்துக் கொண்டோம் . மேலும் பழைய வாழ்க்கை என் நினைவுகளில் இருந்து அகலவில்லை. அதனால் சிரமமிருக்கவில்லை. முதல் பாகத்தை அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் வெளியிட்டேன். இரண்டாம் பாகத்தையும் அதற்கடுத்த மாதமே வெளியிட்டேன். எடிட்டிங் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று இரவுகளில் செய்