இடுகைகள்

எண்ணத்தூறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்புதல் வாக்குமூலம்

கவிதை ஒரு பெகாஸஸ் குதிரை அதன் மீது லாவகமாகப் பாய்ந்தேறி எண்ணங்களைத் துரத்திச் செல்லும் வித்தை அறிந்தவன் நானில்லை  தானாகவே தேடி வந்து முன் விழும் எண்ணப் பாறைகளுக்கு உருக்கொடுக்கும் சிற்பியுமில்லை  பேராற்றலுடன் சொற்களின் பின் ஓடி நொடியும் ஓட்டக்காரனுமில்லை  கவிஞனாவது என் இலக்கும் இல்லை என் கவிதைகளில் இலக்கணத்தைத் தேடுகிறீர்கள் என் கவிதைகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறீர்கள் என் கவிதைகளின் வகைமை என்னவென்று அலசுகிறீர்கள் என் கவிதைகளின் தரத்தை அளவிடுகிறீர்கள் என் கவிதைகளை பிறர் கவிதைகளுடன் ஒப்பிடுகிறீர்கள் என் கவிதைகளைப் பாராட்டுகிறீர்கள் என் கவிதைகளைத் தூற்றுகிறீர்கள்  இனியும் இவையெல்லாம் வேண்டாம் என் கவிதைகளைப் பொருட்படுத்தாதீர்கள் ஏனெனில் அவை கவிதைகளே இல்லை.

கோஷங்கள்

"ஜெய் ஸ்ரீராம்!" "தமிழ் வாழ்க!"  "பெரியார் வாழ்க!" "பாரத் மாதா கீ ஜே!" "ஏர்ஸ்ட ஆன்ஸ மென்ஸன்" "காவேரி நம்மது" கோஷங்கள் எந்த மொழியில் கத்தப்பட்டாலும் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன நானொரு எளிய மனிதன் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கூட்டத்துக்கு எதிரிலும் ஒரு எளிய மனிதன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறான் அவன் என்னைப் போன்றவன் எளிய மனிதர்களின் மீதான கூட்டங்களின் தாக்குதலே இந்தக் கோஷங்கள் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன.

அம்பேத்கர் அழுதுகொண்டிருக்கிறார்..

படம்
நே ற்று முழுவதும் ஒரு பேயைப் போல் வாசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஆப்தால்மிக் மைக்ரைன் காரணமாக ஒருமுறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் நான் பார்வையின்றி இருந்தபோது, அம்பேத்கரைத்தான் நினைத்துக்கொண்டேன். தனக்குப் பார்வை குறைபாடு வந்தபோது, "புத்தகங்கள் படிக்க முடியாமல் போய்விடுமே!" என்று அழுதாராம். நானும் அதேபோல் அந்த இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு, "இப்படியே இருந்துவிட்டால் இனிமேல் எப்படி புத்தகங்கள் வாசிக்கப்போகிறேன்" என்று சிந்தித்து வருந்திக்கொண்டிருந்தேன். உண்மையில் வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்ற காலத்தில் அம்பேத்கர் ஒரு நாளைக்கு இருபது மணிநேரங்கள் படிப்பாராம். "வாசிக்க நேரம் இல்லை" என்று கூறுபவர்கள் கவனிக்க. அவரிடம் நான் காதல் கொண்டதற்குப் பல காரணங்களில் முதன்மையான காரணமும் இதுவே - "புத்தகங்களின் மீதான அவரது காதல்". பாம்பே சட்டக் கல்லூரி முதல்வராக அவர் இருந்தபோது அவரது வீட்டு நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயி...

நான் இல்லாத சமயம்..

அன்பே, நான் இல்லாத சமயம் என்னைப் பற்றி  தேவதை என்றொருவன் சொல்லக்கூடும்  போக்கிரி என்று இன்னொருவனும் மடையன் என்று மற்றொருவனும் ஏமாற்றுப் பேர்வழி என்று எவனோ ஒருவனும் பித்தன் சித்தன் சாத்தான் என்று பல பேரும் பலவிதமாய் பேசக்கூடும் அத்தனையும் உண்மை! நம்புவாயாக.. ‘உன்னைப் பற்றி நீயே சொல்’ என்று கேட்பாயானால் 'நான் ஒரு நிலைக்கண்ணாடியாய் வாழ்ந்தேன்' என்பேன்.

அங்கு மட்டும்

'எங்கும் கடவுளே!'  என்று கூறும் எந்த மதத்தவனும்  வேற்று மத ஆலயத்துக்குச்  செல்ல மறுப்பதன் மூலம்  அங்கீகரிக்கிறான் - அங்கு மட்டும்  அவன் கடவுள் இல்லை  என்பதை.

உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்..

குறிப்பு : "உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.." - கடந்த முறை இந்தியாவிலிருந்து பெல்கியம் திரும்பும் பொழுது அபுதாபி விமான நிலையத்தில் உறவுகளின்,  நண்பர்களின் சிந்தனைக்காக எழுதியது. இ ந்தியாவுக்கு இரண்டு வார விடுமுறை எல்லாம் போதாது. நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று நினைத்த பலரை இந்த முறையும் சந்திக்க இயலவில்லை. செய்ய நினைத்த பல விஷயங்களைச் செய்ய முடியவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுபவன் நான். ஆனால், காலம்? அது ஓடிக்கொண்டே இருக்கிறதே. எனக்காக நிற்க மறுக்கிறதே, என் நினைவுகளைப் போலவே. இன்னும் சில நிமிடங்களில் அபுதாபியிலிருந்து ப்ரசல்சுக்குச் செல்லும் விமானம் கிளம்பிவிடும். ஆனால், அதற்கு முன்பு சில வார்த்தைகள். இது வெறும் பகிர்வல்ல. அனுபவிக்காத எதையும் எழுதவோ பகிரவோ கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. எத்தனை பேர் ஏலாதி படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதை என்னுடைய ஏலாதி என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆறுக்கு அதிகமாகவே இருப்பினும்.    1. உடல்நலம் பேணுங்கள்   பசித்தால் மட்டும் புசியுங்கள். இன்...

புத்தனின் போதி

படம்
சளைக்காமல் சாகசம் பாடி  செவிக்குருதி யாசிக்கிறது மூட பக்தி வாளைச் சுழற்றியபடி  வம்பிழுக்க வருகிறது  மூர்க்க புத்தி  துளிச் சலனமின்றி  சாவதானமாக நிற்கிறது   புத்தனின்  போதி . 

ஈரம்

கடந்து போகும் மேகங்கள் அத்தனையும் பொழிவதில்லை நீருடை மேகங்கள் கூடி நின்று ஆர்ப்பரித்து ஈரமீந்துவிட்டுப் போகின்றன வறட்டு மேகங்கள் வெறுத்து விலகிச் சென்று விடுகின்றன ஆயினும் அவைதம் நிழலால் நிலத்தை நனைத்துவிட்டே போகின்றன நீர் மேகமோ நிழல் மேகமோ நிலத்தின் ஈரம் இரண்டுக்கும்தான்.

சில வரங்களுக்காக..

பி றருக்காக நாம் முடிவெடுக்க நேரிடும் தருணங்கள் கத்தி முனையில் நடப்பது போன்றது; அபாயகரமானது. ஆயினும் நண்பர்களின் நலன் கருதி, அவர்களுக்காக நான் எடுத்த முடிவுகள் சில தவறாக முடிந்திருக்கிறது. ஒரு சிலருக்கு உண்மையான நோக்கத்தோடு உதவி செய்ய விழைந்து, அதில் மற்ற நண்பர்களையும் ஈடுபடுத்தி, பிறகு அந்த முடிவுகள் ஏற்படுத்திய பாதகங்களால் அவர்களது நட்பையும் இழந்து, இருபுறங்களிலிருந்தும் சாபங்களைப் பெற்று, பெரும் சிக்கல்களில் என்னை புகுத்திக்கொண்டு மனதை ரணப்படுத்திக்கொண்ட   தருணங்கள் பல. ஒரு மலரின் அழகை ரசித்து விட்டு, வாசத்தை நுகர்ந்து களிப்புற்று, பின்பு அதைப் பறித்து தலையில் வைத்துக்கொள்ளும்போது சிறு முள் குத்தியது என்பதற்காக, எப்படி அந்த மலரை கசக்கி நசுக்கி வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற நல்லாத்மாக்கள் ஒவ்வொருமுறையும் கண்டும் காணாதவாறு வெறுப்புடன் கடந்து போகும்போதும், மறைந்திருந்து தாக்கும்போதும் என் தந்தையின் நாட்குறிப்பில் ஒருமுறை நான் படித்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்: "என் சிறகுகள் முறிக்கப்படுகின்றன என் எதிரிகள...

புகைவண்டிகள்

க டுங்குளிர். இன்று காலை ஒருவித இறுக்கத்தோடு பேருந்தைப் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு குட்டிப் பெண் தன் தாயின் கையைப் பிடித்தபடி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். என் மகனின் நினைவு வந்தது. இந்தக் குளிரில் குழந்தைகளுக்கு என்ன பள்ளி வேண்டிக்கிடக்கிறது என்று தோன்றியது. அந்தக் குழந்தை வானத்தைப் பார்த்தபடி வாயிலிருந்து புகை விட்டுக்கொண்டே சென்றாள். அவளைக் கடக்கும் போது பார்த்து புன்னகைத்து, 'ஹுய மார்கன்' என்றேன். 'ட்ரேன்..ட்ரேன்..' (புகைவண்டி) என்றாள். இந்தக் குழந்தைக்குப் புகைவண்டியைப் பற்றி எப்படித் தெரியும் என்று யோசித்தேன். என் மகன் அடிக்கடி பார்க்கும் 'ஆங்கில எழுத்துக்களை' பெட்டிகளில் எடுத்துச் செல்லும் புகைவண்டியின் நினைவு வந்தது.  சில நொடிகளில் என்னையும் அறியாமல் நானும் வானத்தைப் பார்த்தபடி புகை விட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். எத்தனை அருமையான விளையாட்டு!! குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது என்று தோன்றியது. குழந்தையாக மாறிவிட வேண்டும் என்று தோன்றியது. இறுக்கம் நீங்கி புத்துணர்வு பெற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பேருந்து ந...

அணைக்கப்படாத கைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பன் ஒருவனைத் தொலைபேசியில் அழைத்தேன். நீ நலமா? நான் நலம். வாழ்க்கை எப்படி? அது சுகம். இங்கும் அதே. வேலை எப்படி? எப்போதும் போல் நன்றாகவே செல்கிறது. இங்கும் அப்படியே. பிள்ளைகள் வேகமாய் வளர்கிறார்கள். அதே அதே. சென்னையில் மழை. பெல்கியத்தில் வெயில். சென்னை வந்தால் சந்திக்கவேண்டும். கண்டிப்பாய். அடிக்கடிப் பேசவேண்டும். இப்படியே. விடைபெற்றுக்கொண்ட நண்பன் அழைப்பதுபோல் உணர்ந்து மீண்டும் கைபேசியை காதோடு அணைத்தேன். பதினைந்து நிமிடங்கள் அவன் சொல்லாத துயரங்களையும், மறைத்த வலிகளையும் மூன்று நிமிடங்களில் விரிவாக எடுத்துரைத்தது நண்பனின் அணைக்கப்படாத கைபேசி. (முகநூல் நிலைத்தகவல்-18/10/2014)

பஞ்சம்

நரிகளின் நடமாட்டம் கூட நாட்டில் பெருகிவிட்டது; ஆனால் நாய்களைத்தான் காணமுடிவதில்லை.  (எண்ணத்தூறல்)

வெற்றிகளும் தோல்விகளும்..

அந்தப் பாட்டையில் எல்லோரும் வெற்றிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே வெற்றியை பல பேர் தூக்கிக்கொண்டு ஓடுவதையும் காண முடிகிறது. அந்த ஓட்டக்காரர்களுக்கிடையேயான வெற்றி உரிமைப் போராட்டத்தில் சில வெற்றிகள் துண்டு துண்டாக உடைந்து போகின்றன. உடைந்த துண்டுகளையும் விடாமல் தூக்கிகொண்டு ஓடுகிறார்கள். நாதியற்ற தோல்விகள் அவர்களின் ஓட்டத்தில் தரையில் நசுங்கி, சிதைந்துச் சாகிறது. (எண்ணத்தூறல்)

கடவுள்

உலகின் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் கடவுள் இல்லை. கடவுளைக் கண்டுபிடித்த மற்றும் அந்தக் கடவுள் இல்லவே இல்லை என்று மறுத்துக்கொண்டும் இருக்கின்ற - இந்த மனிதர்கள்தான். ஒருநாள் உலகமே கூடி கடவுளே இல்லை என்று முடிவு எடுத்து, அனைவருமே நாத்திகர்களாகி விட்டால், அதே நாளில் உலகத்தின் அத்தனை சிக்கல்களும் காணாமல் போய்விடப் போவதில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையோடு சுபிட்சமாய்  வாழ்ந்துவிடவும் போவதில்லை. கடவுளுக்கு பதிலாக இன்னொரு கோட்பாடு உருவாகி இருக்கும். அதை சார்ந்தும், எதிர்த்தும், ஒன்றும் புரியாமல் இடையிலும் என்று மூன்று வகையாக உலகம் பிரிக்கப்படும். சார்ந்து இருப்பவர்களுக்குள்ளேயே ஒரு நூறு கூட்டங்கள் உருவாகும். ஆனால், ஒன்று முக்கியம். ஒருவர் கடவுள் நம்பிக்கையுடையவரா, மறுப்பாளரா என்பதை மட்டும் வைத்து , அவர் அறிவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. இரு புறங்களிலும் மிகச்சிறந்த அறிவாளிகளைச் சந்தித்திருப்பதால் எடுத்த முடிவு இது. இரு புறங்களிலும் மூடர்களை கண்டிருப்பதாலும்தான். கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்பது போன்ற பிதற்றல்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. Being a ratio...

அ..ஆ..இ..

படம்
மனிதனின் இடுப்புச் சுற்றளவு - 0.001 கிலோ மீட்டர் ( என்று வைத்துக்கொள்வோம் )   பூமியின் சுற்றளவு - 40075 கிலோமீட்டர்   வியாழ னின்   சுற்றளவு - 448969 கிலோமீட்டர்   சூரியனின் சுற்றளவு - 4368175 கிலோமீட்டர்   ரைஜலின் சுற்றளவு - 340717650 கிலோமீட்டர்   மு - செபேயின் சுற்றளவு - 2839313750 கிலோமீட்டர்   கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு - 6202808500 கிலோமீட்டர்   இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம் ...   மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ .. ஆ .. இ .. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து ?   அகம்பாவம் ... ஆணவம் ... இறுமாப்பு ...! அந்த மனிதன் ஒருவேளை   அந்த   நட்சத்திரத்தை     விட  ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா ? தூசு நான் ! ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை என் பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு !   எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம் ..  ஆணவம் ...

வன்முறை

என்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - தாவரங்கள் எனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை உன்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - கால்நடைகள் உனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி உனக்குக் கவலையில்லை அவனுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் - நீயும் நானும் அவனுக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை

வெகுதொலைவில்..

அது ஒரு நதிப்பிரவாகம் . அதன் கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த   இலையென விழுந்தேன் .. அடித்துச் சென்றது பிரவாகம் . இருப்பினும் எப்படியோ சுழிக்குள் சிக்காமல்   சிதையாமல் மூழ்காமல் லாவகமாய் அதன்மேலே தவழ்ந்து சென்று வேறேதோவோர் கரையில்   ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் - ' என்னை விட்டு நான் வெகுதொலைவு வந்துவிட்டதை !'. ( எண்ணத்தூறல் - 6 )

பின்னடைவு..

ஒரு சாதனைக்குப் பிறகு .. குடும்பம் குதூகலிக்கிறது . தோள்கொடுத்த நட்பு பெருமைப்படுகிறது . சான்றோர் சபை விமர்சிக்கிறது . பகைமை பொறுமுகிறது . அனுபவம் அமைதிகாக்கிறது . அறியாமையும் அமைதிகாக்கிறது .   ஒரு பின்னடைவுக்குப் பிறகு .. ' அத்தனையும் அறிவுரை கூறுகிறது .'   ( எண்ணத்தூறல் - 5 )