இடுகைகள்

புத்தகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுவர்களுக்கான புத்தகப் பட்டியல்

படம்
இ லண்டனில் வசிக்கும் நண்பன் முரளி சிறுவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அனுப்பச் சொன்னான். அந்தப் பணியை என்னைவிட என் மகனே  செய்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியதால் அவனிடம் கோரிக்கை வைத்தேன். உடனே அனுப்பிவிட்டான்.  இதோ முகநூலில் அவன் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்: * * * * * * * * * *  RECOMMENDED LIST OF BOOKS  My dad's friend asked me to send him the list of books I have read. These are the English books that I have read - listed in alphabetical order. Novel series' are separated below. I have not also included the Dutch and Tamil books I have read. I will make a separate list soon.  Books Aesop's Fables Around the World in 80 Days D'Aulaires' Greek Mythology Diary of a Wimpy Kid Fantastic Beasts & The Crimes of Grindelwald (The Original Screenplay) Global Warming Great Rulers of India Gulliver's Travels Human Body - a ch...

போதிதர்மரும் தங்கமீன்களும்

படம்
எ ன்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, "நீயே அவருக்குக் கடிதம் எழுது.." என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்...

குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் " ஹோட்டல் காஸ்ஆனஸ் ".    ஹோட்டல் காஸானஸ் "ஆனஸ்" என்பது ஆசனவாயேதான் (Anus). "என்னக் கொடுமை இது?" என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. "மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது" என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் 'யூப் ஃபன் லீஸ்ஹௌட்' என்கிற டச்சு வடிவமைப்பாளர்.  விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். 'குதவ...

அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு..

படம்
அம்மாவின் தேன்குழல்: அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு - எழுத்தாளர் ஜோ டி குருஸ் ஒ ரு காலத்தில் ஜமீன்தார் பிள்ளைகளுக்கும் அதன் பின்னான காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே கிடைத்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு 90களில் நமது அடித்தள மக்களின் பிள்ளைகளுக்கும் மென்பொருள் துறைமூலம் வாய்த்தது. சமுதாயத்தின் மேலடுக்குகளில் உள்ளவர்களும் பயணித்தார்கள் ஆனால் வழக்கம்போலவே கிடைத்த வாழ்வைத் தூய்த்தார்களே அல்லாது புலம்பெயர் வாழ்வை, அதன் சூழலை, பொருளாதாரச் செழுமையை, சிக்கல்களை அதன் நிகழ் தருணங்களில் கிடைக்கும் தரிசனங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்ததில்லை. தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டுமே என்ற அவர்களின் வழக்கமான இயல்பு. அக்கறையான நமது பிள்ளைகள் புலம் பெயர்ந்தபோது அந்த வாழ்வுசார் புரிதலும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு மின்னெலென பளிச்சிடும் தரிசனங்களும் அதன் சுவராஸ்யங்களும் தமிழுக்கு கொடையாக கிடைத்துவிடுகின்றன. அப்படியானதொரு கொடையாகத்தான் தம்பி மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன்குழல் என்ற இந்தத் தொகுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாசிக...

Fear no more..

இ ன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம்   கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாட புத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி. 'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நி...

கற்றலே வாழ்க்கை

படம்
இ ன்று உலக புத்தக தினம். காலை எழுந்தவுடன் என் மகனிடம், 'இன்று உலக புத்தக தினம். நாம் இருவரும் ஒன்றாக புத்தகம் ஒன்றை வாசிக்கலாமா?' என்று யோசனைதெரிவித்தேன். குதூகலத்துடன், 'என்ன புத்தகம்? என்ன புத்தகம்?' என்று கேட்டான். 'நீ போய் உன் அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா.' என்றேன். அவன் தேர்ந்தெடுத்த புத்தகம் 'ரிச்சர்ட் டேவிட் பாக்' எழுதிய 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' என்கிற புத்தகம். சிறப்பான இந்நாளில் வாசிப்பதற்கு எத்தனை பொருத்தமானதொரு புத்தகம். இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் சிறுவயதில் தன்னுடைய கையொப்பமிட்டுப் பரிசளித்த புத்தகம். சிறுவயதில் நானும் என் தம்பியும் ஒன்றாக வாசித்த புத்தகம். இன்றைக்கு அவன் சுருங்கி என்னுடன் வாசித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் என்ன, ஒரு பத்தி படிப்பதற்குள் ஓராயிரம் கேள்விகள், கிளைக் கதைகள். மகாபாரதத்தை வியாச முனி சொல்லக் கேட்டு எழுதியபோது நிச்சயம் விநாயகர் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கவேண்டும். 'பறப்ப...

லாக்கப்.. விசாரணை.. தடம்..

படம்
லா க்கப் நாவலும், விசாரணை திரைப்படமும் தெரியும். அது என்ன தடம்? லாக்கப் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. எங்கும் விசாரணை பற்றிய பேச்சாய் இருப்பதால் மிகுந்த ஆவலுடன் இன்று விசாரணை படம் பார்த்தேன். ஆந்திரத்தில் பூங்காவில் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மூன்று தமிழக இளைஞர்களை காவல்துறையினர் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். படத்தின் ஒன்பதாவது நிமிடம், காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி தனக்கு ராசியானதொரு லத்தியைத் தேர்ந்தெடுத்து அந்த இளைஞர்களை விளாச ஆரம்பித்த கணம் வரைதான் நான் படத்தோடு இருந்தேன். அதன் பிறகு என் மனம் தடம் மாறி திலீப் குமார் அவர்களின் 'தடம்' சிறுகதைக்குள் விழுந்துவிட்டது. தடம் சிறுகதையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு போராளி லாக்-அப்பிற்குள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும், அத்தருணத்தில் அவனுடைய மனவோட்டத்தையும் செறிவாக பதிவு செய்திருப்பார் திலீப். விசாரணைக்கும் தடத்திற்கும் இருக்கும் ஒற்றுமை லாக்-அப்பிற்குள் விசாரணையின் பெயரால் குற்றவாளிகள் சந்திக்கும் சித்திரவதைகளும் அதிகாரிகளின் குரூரமும்தான். தடம் சிறுகதையை வாசித்திராதவர்களை விசாரணை நிச்சயம் பாதித்திருக்...

தீனன் நூலகம் (Tienen Bibliotheek)

படம்
செ ன்ற வாரம் தீனன் (Tienen) நகர குழந்தைகள் நூலகத்துக்கு என் மகனுடன் சென்றிருந்தேன். உண்மையில் குழந்தைகளுக்கான இதுபோன்றதொரு நூலகத்தை இதுவரை நான் கண்டதில்லை. இலக்கியம், தகவல் களஞ்சியங்கள், புதிர்கள், விளையாட்டு, பாட புத்தகங்கள் என்று வயதுவாரியாக அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர எண்ணற்ற குழந்தைத் திரைப்பட மற்றும் விளையாட்டு டி.வி.டி-கள், ப்ளூரே தகடுகள். நான் சிறுவயதில் பார்த்த ஹோம் அலோன், ஜுமாஞ்சி திரைப்படங்களிலிருந்து சென்ற வருடம் வெளியான தி குட் டைனசார் வரை அனைத்து திரைப்படங்களும் கிடைக்கிறது. எதை எடுப்பதென்றே தெரியாமல் ஒரு பத்து படங்கள் எடுத்து வந்தோம். ஒவ்வொரு குழந்தையும் பத்து டி.வி.டி-கள், இருபது புத்தகங்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். தாமதமானால் அபராதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு நாளைக்கு 5 சென்டுகள் (மூணரை ரூபாய்). எடுத்துவந்த புத்தகங்களில் அதற்குள் நான்கு புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டான் என் மகன். அவன் வாசிக்கும் வேகம் எனக்கே பிரமிப்பூட்டுகிறது. அவனுடன் அமர்ந்து படிப்பதற்காக இந்தப் புகைப்படத்திலுள்ள பு...

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (3)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் அம்மாவின் தேன்குழல் புத்தக மதிப்புரையை எழுதியுள்ளார். கடந்த முறை இந்தியா வந்தபோது புத்தக விழாவில் ஜே.டி.சாலிஞ்சரின் 'The Catcher in The Rye' (தமிழில் 'குழந்தைகளின் ரட்சகன்' - எதிர் வெளியீடு) வாங்கி வந்தேன். இன்னும் வாசித்து முடிக்கவில்லை. தமிழில் திரு.சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்த மதிப்புரையை எழுதியவர் அவர்தானா என்று தெரியவில்லை. அவராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இனி அவருடைய மதிப்புரை.. மாதவன் இளங்கோவும் தேன்குழல் மகாத்மியமும்…! கவித்துவமான தலைப்பு. சமீப காலத்தில் `அம்மா’ என்கிற புனிதமான சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு, நுகர்வு கலாசாரத்தில் ஒரு `ப்ராண்ட்’ ஆக உருவெடுத்து வருகிறது. அம்மாவின் தேன்குழல் புத்தகம் சந்தைக்கு வந்து விட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து `அம்மா’ தேன்குழல் சந்தைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாதவன் இளங்கோ எழுதி வெளிவந்திருக்கும் `அம்மாவின் தேன்குழல்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இத்தலைப்பினால் ஆன கதையின் மூலம் அம்மாவின் ...

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (2)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் மற்றுமொரு மதிப்புரை. இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா மற்றும் இதற்கு முந்தைய மதிப்புரையை எழுதியுள்ள பா. பூபதி இருவரும் நான் அறிந்திராதவர்கள். வாசகர்கள் இவ்விருவரின் விமர்சனங்களையும், கருத்துகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 'காதிரைச்சல்' எனும் கொடுங்கனவில் உழன்று கொண்டிருக்கையில் மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரைகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. காதிரைச்சலைப் (Tinnitus) பற்றி விரிவாக எழுதுகிறேன். மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா அவர்களின் மதிப்புரை: ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் முழு அறிமுகத்தையும் செய்துவிட்டார். அவர் கூறுவது போல இப்புத்தகம் புலம் பெயர்ந்தவர்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதாய் தோன்றினாலும், பல விழுமியங்களைத் தொட்டே செல்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இதுமட்டுமன்றி இந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுவதாக ஆசிரியரின் அறிமுகவுரையில் அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை வ...