இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோஷங்கள்

"ஜெய் ஸ்ரீராம்!" "தமிழ் வாழ்க!"  "பெரியார் வாழ்க!" "பாரத் மாதா கீ ஜே!" "ஏர்ஸ்ட ஆன்ஸ மென்ஸன்" "காவேரி நம்மது" கோஷங்கள் எந்த மொழியில் கத்தப்பட்டாலும் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன நானொரு எளிய மனிதன் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கூட்டத்துக்கு எதிரிலும் ஒரு எளிய மனிதன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறான் அவன் என்னைப் போன்றவன் எளிய மனிதர்களின் மீதான கூட்டங்களின் தாக்குதலே இந்தக் கோஷங்கள் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன.

நடைபாதையில் ஒரு கலைப்படைப்பு

படம்
கடந்த ஞாயிறன்று நண்பர்களுடன் பன்னிரண்டு கிலோமீட்டர் நடைபயணம் புரிந்தேன். நடப்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்குமாக அமைக்கப்பட்ட பிரத்யேகமான பாதை அது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாதைகளில் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த முறை நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை ஒட்டிய நிலப்பரப்பில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இந்த "திருகுசுருள் வடிவ அறுகோண பார்வைக் குழாய்" கலைப்படைப்பு என் கண்களை கவர்ந்திழுத்தது. "ஹெலிக்ஸகன்" என்று அழைக்கப்படும் இந்தக்  கலைப்படைப்பை வடிவமைத்தவர் "ஃப்ரடெரிக் வாஸ்" என்னும் கலைஞர். பிரபஞ்சம் என்பது சிக்கலான ஒன்றோடொன்று இணைந்ததொரு வலைப்பின்னல். இயற்கையில் மையமாகத் திகழும் அறுகோணம், சுருள் போன்ற வடிவியல் வடிவங்களை இணைத்து ஒரு புதிய வடிவத்தை இந்தப் படைப்பின் மூலம் உருவாக்கியுள்ளார் ஃப்ரடெரிக். சுருள் வடிவம் டி.என்.ஏ-வைக் குறிக்கிறது. அறுகோணம் கார்பன் அணுவைக் குறிக்கிறது. அறிவியல் அறிந்தவர்களுக்கு இந்த இரண்டு வடிவங்களின் முக்கியத்துவம் தெரியும். அவ்வளவு ஏன் பள்ளிக்கே போகாத தேனீக்களுக்குக்கூட அறுகோணத்தின் அருமை தெரியும். இந்தப

வாசக சாலையில் ஒரு நடைப்பயணம்

படம்
காலநிலை மாற்றம் பெல்ஜிய வானிலை மீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பேய் மழை. இங்கு பெய்யும் மழை அங்கு பெய்திருக்கக்கூடாதா என்று எழுதியிருந்தேன். அடுத்த நாளே சென்னையில் மழை. ஆனால் இப்போது இங்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களில் எவ்வளவு மாற்றம்! நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் மே, ஜூன் மாதங்களில் கம்பளிச் சட்டை அணிந்து அலுவலகத்துக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது. ஆனால் கடந்த மாதம் ஆல்ப்ஸ் மலை மீதே அரைக்காற்சட்டையுடன் நடைப்பயணம் புரிந்துகொண்டிருந்தேன். இருந்தாலும் என்னைப் போன்றவர்களைத் தாயகம் நன்றாகவே தயார் செய்து அனுப்பிவைத்திருப்பதால் வெப்ப அலைகள் அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பாவம் நண்பர்கள் அதிக அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். என் மகனே "உஸ், புஸ்ஸென்று" அமர்ந்திருக்கிறான். இங்குள்ள வயதானவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மின்விசிறிகூட இருக்காது. முன்பெல்லாம் இதுபோன்ற அதி வெப்ப நாட்கள் வருடத்துக்கு ஐந்தாறு முறை வரும். அதனால் மின்விசிறி இ

தண்ணீர்.. தண்ணீர்..

படம்
அம்மாவிடம் சென்னை மாநகரின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். தோழி யாஷிகாவும் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்களுடன் வாட்சேப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவற்றில் தெரிவது தண்ணீரே இல்லை. வேதியியல் ஆய்வகங்களில் குப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றதொரு மஞ்சள் திரவம். "இந்த திரவத்துக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முன்னூறு ரூபாய் கொடுக்கவேண்டியதாய் இருக்கிறது. நாங்களாவது பரவாயில்லை. குடிப்பதற்கும், சமையலுக்கும் வேண்டிய தண்ணீரை விலைக்கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை செய்பவர் வீட்டில் இந்தத் தண்ணீரைத்தான் பருகுகிறார்கள். இதைக் கொண்டுதான் சமைக்கிறார்கள். ஏன் நமக்கு மட்டும் இந்த நாதியற்ற நிலைமை? அரசாங்கம் என்ன செய்கிறது? கட்டுகிற வரிப்பணமெல்லாம் எங்குதான் போகிறது?" என்கிற வினாக்களுடன் அந்த குறுஞ்செய்தி ஒரு குறுங்கட்டுரையைப் போல் நீண்டுகொண்டே சென்றது. நியாயமான கேள்விகள்தான். அதில் ஒரு கேள்வி, "இதைப் பற்றி நீங்கள் ஏன் எழுதக்கூடாது?" என்பது.  "என்னுடைய ஐந்து கொடுங்கனவுகள்" என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கிற எ