இன்பத்தை இசை யாழே
எ ன் வாழ்க்கையில் நான் மிகவும் பலவீனமாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று. உண்மையில் அதுபோன்ற பலவீனமான தருணங்கள்தான் இன்றைய என்னுடைய பலத்துக்கே காரணமாயிருக்கிறது.என்னுடைய பலவீனத்தைக் கூட வெட்கமின்றியும் தயக்கமின்றியு ம் பேசும் இன்றைய துணிவுக்கும் அவையே காரணம். நூறு புத்தகங்கள் வாசிப்பதால் கிட்டும் ஞானத்தை ஒரு துன்பகர நிகழ்வு எளிதாக போதித்து விடும். அதே சமயம் என்னை அந்தத் தருணங்களில் தம் தோள்களில் தாங்கிப் பிடித்திருந்தவர்கள் இல்லாவிடில் இன்றைக்கு நான் ஏது? 'இன்றைய நான்' ஏது? அந்தத் தருணங்களையும், அந்த நல்மனங்களையும் நினைத்துப் பார்த்து என்னுடைய மீள்நினைவுகளை அவ்வப்போது எழுதி வருகிறேன். அவற்றில் சிலவற்றை அப்போதே பகிர்ந்துவிடுகிறேன். சிலவற்றை அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். பலவற்றை பகிராமல் கணினிக்குள்ளேயே பூட்டி வைத்து அதற்கான காலம் வரட்டும் என்று காத்திருக்கிறேன். அவற்றையெல்லா ம் தொகுத்து 'மீள்நினைவுகள்' என்று நூலாகவும் வெளியிடலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் பார்க்கலாம். என் வலிகளை தன் தோள்களில் தாங்கிப் பிடித்து பிரார்த்தித்த ஒரு சிறு