இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்..

குறிப்பு : "உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.." - கடந்த முறை இந்தியாவிலிருந்து பெல்கியம் திரும்பும் பொழுது அபுதாபி விமான நிலையத்தில் உறவுகளின்,  நண்பர்களின் சிந்தனைக்காக எழுதியது. இ ந்தியாவுக்கு இரண்டு வார விடுமுறை எல்லாம் போதாது. நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று நினைத்த பலரை இந்த முறையும் சந்திக்க இயலவில்லை. செய்ய நினைத்த பல விஷயங்களைச் செய்ய முடியவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுபவன் நான். ஆனால், காலம்? அது ஓடிக்கொண்டே இருக்கிறதே. எனக்காக நிற்க மறுக்கிறதே, என் நினைவுகளைப் போலவே. இன்னும் சில நிமிடங்களில் அபுதாபியிலிருந்து ப்ரசல்சுக்குச் செல்லும் விமானம் கிளம்பிவிடும். ஆனால், அதற்கு முன்பு சில வார்த்தைகள். இது வெறும் பகிர்வல்ல. அனுபவிக்காத எதையும் எழுதவோ பகிரவோ கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. எத்தனை பேர் ஏலாதி படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதை என்னுடைய ஏலாதி என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆறுக்கு அதிகமாகவே இருப்பினும்.    1. உடல்நலம் பேணுங்கள்   பசித்தால் மட்டும் புசியுங்கள். இன்னும் கொஞ்சம் பசி இருக்கும் பொழுதே

உணவுமுறைத் தேர்வு முரண்பாடு : "குறைவே நிறைவு"

படம்
எ ழுத்தாளர் ஜெயமோகன் பேலியோ உணவுமுறைப் பற்றி எழுதியிருந்த கட்டுரைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த இரத்தவகை உணவுமுறையைப் பற்றி நியாண்டர் செல்வன் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து மீண்டும் நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அவருடைய தளத்தில் கடிதங்கள் பிரசுரிக்கப்படுவதில் இருக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. துறை வல்லுநர்களிடமே உடனடியாகத் தொடர் பு கிடைத்துவிடுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய டின்னிட்டஸ் பிரச்சினையைப் பற்றி அவருக்குக் கடிதம் எழுதியபோதே இதை உணர்ந்திருக்கிறேன். யோகம், ஆயுர்வேதம், மருத்துவம் என்று பல்துறை வல்லுநர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்தது. டின்னிட்டஸ் பிரச்னையில் உழன்றுகொண்டிருக்கும் பல வாசகர்களிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. அவர்களில் பலருடன் இன்றளவும் தொடர்பிலிருக்கிறேன்; அவ்வப்போது நலம் விசாரித்தும் வருகிறேன். இந்தியாவில் வசித்து வரும் ருவாண்டா தேசத்துப் பெண்ணொருத்தி என்னை அண்ணனாகவே பார்க்கிறாள். இது டின்னிட்டஸ் வழி உறவு. இன்னும் இப்படி எத்தனையோ உறவுகள்.    நியாண்டர் செல்வன் அ

போதிதர்மரும் தங்கமீன்களும்

படம்
எ ன்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, "நீயே அவருக்குக் கடிதம் எழுது.." என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்

புத்தனின் போதி

படம்
சளைக்காமல் சாகசம் பாடி  செவிக்குருதி யாசிக்கிறது மூட பக்தி வாளைச் சுழற்றியபடி  வம்பிழுக்க வருகிறது  மூர்க்க புத்தி  துளிச் சலனமின்றி  சாவதானமாக நிற்கிறது   புத்தனின்  போதி . 

பொறாமை எனும் நஞ்சு..

படம்
க டந்த வாரம் நான் எழுதிப் பதிவிட்டிருந்த " புறங்கூறாமை எனும் அறம் " பதிவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வழியாகவும் பல நண்பர்கள் பாராட்டிச் செய்தி அனுப்பி இருந்தார்கள். ஒரு சிலருக்கு உடனே பதிலனுப்பிவிட்டேன். ஆனால், தொடர்புகொண்ட அனைவருக்குமே உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் எடுத்து பதில் அளிக்க விழைவதும் ஒரு காரணம்.  ஒரு சிலர், "சுய மேன்மை" (personal excellence) சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதுதான் சிறந்தக் கட்டுரை என்றார்கள். உண்மையிலேயே மனநிறைவு அளிக்கும் சொற்கள் இவை. நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவாயினும், அதை ஒரு வசைக் கட்டுரையாகவும் பலர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால் அதற்கு மாறாக, வந்துகொண்டிருக்கும் எதிர்வினைக ள் எனக்கு உவகையளிப்பதாகவே உள்ளது;  மனதில் நம்பிக்கைப் பிறக்கிறது; புத்தொளி பாய்ச்சுகிறது. என்னையும், என்னுடைய செயல்களையும் தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்து

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..

படம்
நா ட்குறிப்பு எழுதுவது எளிது. அது நாமே நமக்காக எழுதிக்கொள்வது. என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்காக எழுதுவதற்குத் தனித்திறமை வேண்டும். குறிப்பாக குழந்தை எழுத்தாளர்களை நான் வியப்புடன் பார்க்கிறேன். குழந்தைகளுக்கு எழுதுவதென்பது ஒரு சவாலான விஷயம்; அத்தனை எளிதானதில்லை. உதாரணத்துக்கு, மாணவர்களுக்கான தினமலர் பட்டம் இதழுக்காக "வானவில்" பற்றி நான் எழுதிய எளியதொரு அறிவியல் துணுக்கை எடுத்துக்கொள்வோம். அது மொத்தம் மூன்று வழிகளில் எழுதப்பட்டது. இறுதியாக, மூன்றாவது வடிவமே இதழில் பிரசுரிக்கப்பட்டது. பட்டம் இதழின் உதவி ஆசிரியர் பொன். வாசுதேவன் அவர்களுக்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும். ஒரு இதழில் ஆசிரியரின் பங்கு என்னவென்பதற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப்பிழைகளோடு புத்தகங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இஃதோர் அரும்பணியன்றோ.  வாசித்துப் பாருங்கள். புரியும்.   ஒன்று - "வானவில்லுக்கு எத்தனை நிறங்கள்?" வானவில் ஒரு கண்கவர் வளிமண்டல நிகழ்வு. குழந்தைகளாகட்டு