கதம்ப சாம்பார்
க டந்த இரு தினங்களாக சமையலறையை என்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு கதம்ப சாம்பார் செய்தேன். இது என்னுடைய சொந்த சமையல் குறிப்பு. பெயர்கூட நான் வைத்ததே. ஏற்கனவே அந்தப் பெயரை யாராவது பயன்படுத்தி இருந்தால் சண்டைக்கு வராதீர்கள். இந்தச் சோதனை முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்த சாயிக்கும் ப்ரியாவுக்கும் நன்றி. கதம்ப சாம்பார் செய்துகொண்டிருக்கும் போதே இந்தக் குட்டி காணொளியை எடுத்து எங்கள் குடும்ப வாட்சேப் குழுவுக்கு அனுப்பினேன். அங்கு எனக்கு ஒரு நான்கைந்து "அப்ரென்டிசுகள்" இருக்கிறார்கள். அதிலும் எனக்கு வாய்த்த மைத்துனர்கள் இருக்கிறார்களே. சுடுதண்ணீருக்குக்கூட செய்முறை விளக்கம் கேட்கும் ரக சமையல் பழகுநர்கள். மகள் காயத்ரி, "கதம்பம் என்றால் என்ன சித்தப்பா?" என்று கேட்டாள். கதம்பம் என்றால் கூட்டுக்கலவை என்று பொருள். வீட்டிலுள்ள எல்லா காய்கறிகளையும் நறுக்கிப் போட்டு, குறைவான அளவு தேங்காய்த் துருவலைச் சேர்த்து, சாம்பார் பொடி மட்டுமல்லாது, மிளகு, தனியா, சீரகப் பொடிகளையும் அளவாகச் சேர்த்து சமைத்தேன். வழக்கமாக சாம்பாரில் சேர்க்கும் புளிக் க...