படைப்பாளியும் எதிர்ப்புகளும்
முகநூலில் என்னுடைய இயக்கம் அதிகரித்திருப்பதை அங்கு என்னைத் தொடரும் உணர்ந்திருக்கலாம். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். 'பாலில் விஷம்' என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லை. ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருந்தேனே ஒழிய என்னுடைய அன்றாட நடப்பு குறிப்புகள் எழுதுவதை என்றுமே நிறுத்தியதில்லை. முகநூலை எனது நாட்குறிப்புச் சுவடியாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் இங்கே நான் பகிரும் பதிவுகள் என்னுடைய நாட்குறிப்புச் சுவடியின் ஒரு பகுதி மட்டுமே. நான் இதுவரை எழுதியிருக்கும் அத்தனையுமே பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதற்கு என்னைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று எண்ணுகிறேன். நண்பர் வெங்கட் ஒருமுற