இடுகைகள்

கேள்வி-பதில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"டூ மச்"

கேள்வி : "என்ன மாதவன்? இவ்வளவு அருமையான (தமிழ்) திரைப்படத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே? இந்த காலத்தில் அவசியம் பேச வேண்டியதைத்தானே பேசியிருக்கிறார்கள். நல்ல கதைத்தானே? உங்களின் எதிர்பார்ப்புதான் என்ன? திஸ் ஈஸ் டூ மச்." பதில் : அவசியம் பேச வேண்டிய விஷயம்தான். இதில் உங்கள் கருத்தேதான் என்னுடையதும். நாம் இருவருமே காண விரும்புவது அலைகளைத்தான். அந்த அலைகள் எப்படி உருவாக வேண்டும் என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். உங்களுக்கு சக்திவாய்ந்த புயலொன்று கடலில் உருவாக வேண்டும். கடல் கொந்தளிக்க வேண்டும். பெரும் சீற்றத்துடன் சுழன்று அடித்துக்கொண்டு அந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து அலைகளை உருவாக்க வேண்டும். கடலின் கொந்தளிப்பைப் பாருங்கள். சீறி வரும் புயலைப் பாருங்கள் என்று கூறுகிறீர்கள். இது போதாதா என்று கேட்கிறீர்கள். நான் பெரிதினும் பெரிது கேட்பவன். நான் காண விரும்புவது ஆழிப்பேரலைகளை. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் புயல்களுக்கு சுனாமிகளை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்று நம்புகிறேன். ஆழ்கடலின் அடித்தளத்தில் எவர் கண்களுக்கும் தெரியாமல் அதிர்ந்து சுனாமிப் பேரலைகளை உருவாக்கும்...

மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிகள்

படம்
ராம், ஆன்ட்வெர்ப், பெல்ஜியம். கேள்வி: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஐந்து முக்கியமான வழிகள்? பதில்: நூல்களை வாசித்துவிட்டு நிறைய பேர் ஐந்து-பத்து என்று இதுபோன்று பட்டியல்களை வெளியிடுகிறார்கள், ராம். சுயமேன்மை நூல்களை ஒதுக்கி விட்டு இலக்கியத்துக்குள் நான் நுழைந்ததற்கான காரணமே இதுதான். அங்கு சிறிதளவேனும் உண்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் பட்டியலில், நான் உட்பட வழக்கமாக எல்லோரும் சொல்லும் நூல்களை வாசித்தல், திரைப்படம் பார்த்தல், பயணங்கள் புரிதல், அறச் செயல்கள், தியானம் செய்தல் போன்ற வழிகளையெல்லாம் பட்டியலிட விரும்பவில்லை. அவையெல்லாம் போலச் செய்பவர்களுக்கும், உறுதிப்படுத்தல் சார்பு மனநிலையுடையவர்களுக்கும் (Confirmation Bias) ஒருவேளை திருப்தியளிக்கலாம். நாற்பது வருடங்களாக தொடர்ந்து தியானம் செய்து "அமைதி கிலோ என்ன விலை?" என்று கேட்கும் மூர்க்கர்களையும் பார்த்திருக்கிறேன். தியானம் என்றால் என்னவென்றே தெரியாத நண்பர்கள் சிலர் சாந்த சொரூபிகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் கண்ணுற்றிர...