இடுகைகள்

நான் இல்லாத சமயம்..

அன்பே, நான் இல்லாத சமயம் என்னைப் பற்றி  தேவதை என்றொருவன் சொல்லக்கூடும்  போக்கிரி என்று இன்னொருவனும் மடையன் என்று மற்றொருவனும் ஏமாற்றுப் பேர்வழி என்று எவனோ ஒருவனும் பித்தன் சித்தன் சாத்தான் என்று பல பேரும் பலவிதமாய் பேசக்கூடும் அத்தனையும் உண்மை! நம்புவாயாக.. ‘உன்னைப் பற்றி நீயே சொல்’ என்று கேட்பாயானால் 'நான் ஒரு நிலைக்கண்ணாடியாய் வாழ்ந்தேன்' என்பேன்.

காலை 8.45 மணிக்கு புனித யாகோபு சதுக்கத்தில்

காலை 8.45 மணி . லூவன் நகரத்தின் புனித யாகோபு சதுக்கம் பேருந்து நிறுத்தம் . என்னுடைய நாள் துவங்கும் நேரமும் இடமும் இது . தினமும் ஆறு மணிக்கே எழுந்து விட்டாலும் , ஆறிலிருந்து எட்டு வரை நான் செய்யும் அத்தனைக் காலைக்கடன்களையும் ஒருவித தியான நிலையிலேயே செய்து முடிப்பேன் . ஆறுமணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டுத் தூங்கும் நண்பர்கள் பலர் காலையில் செய்வதை பார்த்திருக்கிறேன் . அலாரம் அடிக்கும் போது , கை மட்டும் விழித்துக்கொண்டு ஒரே அழுத்தாக சேவலின் கழுத்தை நெறிப்பது போல , அலாரத்தை அழுத்தி உறக்கநிலைக்கு அனுப்பிவிட்டு அதுவும் தூங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து முறையாவது அந்தக் கையுடன் அலாரம் பரிதாபமாகப் போராடும் . நான் நிச்சயம் அந்த ரகம் அல்ல . அலாரம் அடித்த அடுத்த நொடி குபீரென்று விழித்தெழுந்து , ஸ்னூஸ் செய்துவிட்டு , கண்களை மூடிக்கொண்டு படுக்கையிலேயே அமர்ந்து தியானம் செய்யத் தொடங்குவேன் . தியானம் தொடங்கிய சில நொடிகளில் தலை தொங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து ஸ்னூஸ்களுக்கு என் தியானம் தொடரும் . அதிலும் திங்கட்கிழ...