நான் இல்லாத சமயம்..

அன்பே,
நான் இல்லாத சமயம் என்னைப் பற்றி 
தேவதை என்றொருவன் சொல்லக்கூடும் 
போக்கிரி என்று இன்னொருவனும்
மடையன் என்று மற்றொருவனும்
ஏமாற்றுப் பேர்வழி என்று எவனோ ஒருவனும்
பித்தன் சித்தன் சாத்தான் என்று
பல பேரும் பலவிதமாய் பேசக்கூடும்
அத்தனையும் உண்மை!
நம்புவாயாக..
‘உன்னைப் பற்றி நீயே சொல்’ என்று கேட்பாயானால்
'நான் ஒரு நிலைக்கண்ணாடியாய் வாழ்ந்தேன்' என்பேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..