அமைதிகளின் சத்தங்கள்..
இரைச்சல் விழுங்கிய
இசையின் அமைதி..
பெரும்கூட்டத்தில் சிக்குண்ட
தனிமைவிரும்பியின் அமைதி..
மூடத்தனங்களுக்கு இடையே
மேதைமையின் அமைதி..
இருளுக்குள் ஒளிந்துகொண்ட
ஒளியின் அமைதி..
ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே
அடக்கமானவனின் அமைதி..
உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே
ஒடுக்கப்பட்டவனின் அமைதி..
துரோகிகளுக்கு இடையே
தூயநட்பின் அமைதி..
பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட
உண்மையின் அமைதி..
குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே
நிறைகுடத்தின் அமைதி..
இயந்திரங்களுக்கிடையே
இயற்கையின் பேரமைதி..
வெட்டிப்பேச்சுகளுக்கிடையே
உழைப்பின் அமைதி..
ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே
எளிமையின் அமைதி ..
பிற சத்தங்கள் அனைத்துமென்
செவிப்பறையை கிழித்து
செவிடனாக்கிவிட
அத்தனை
அமைதிகளின் சத்தங்களும்
தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
'அமைதியடைந்தேன் நான்'!
(எண்ணத்தூறல்)
இசையின் அமைதி..
பெரும்கூட்டத்தில் சிக்குண்ட
தனிமைவிரும்பியின் அமைதி..
மூடத்தனங்களுக்கு இடையே
மேதைமையின் அமைதி..
இருளுக்குள் ஒளிந்துகொண்ட
ஒளியின் அமைதி..
ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே
அடக்கமானவனின் அமைதி..
உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே
ஒடுக்கப்பட்டவனின் அமைதி..
துரோகிகளுக்கு இடையே
தூயநட்பின் அமைதி..
பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட
உண்மையின் அமைதி..
குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே
நிறைகுடத்தின் அமைதி..
இயந்திரங்களுக்கிடையே
இயற்கையின் பேரமைதி..
வெட்டிப்பேச்சுகளுக்கிடையே
உழைப்பின் அமைதி..
ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே
எளிமையின் அமைதி ..
பிற சத்தங்கள் அனைத்துமென்
செவிப்பறையை கிழித்து
செவிடனாக்கிவிட
அத்தனை
அமைதிகளின் சத்தங்களும்
தெளிவாகக் கேட்கத்தொடங்கின..
'அமைதியடைந்தேன் நான்'!
(எண்ணத்தூறல்)
சொன்னவிதம்... உண்மைகள்... மனதைக் கவர்ந்தது... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி, தனபாலன்!!!
நீக்கு