கோஷங்கள்

"ஜெய் ஸ்ரீராம்!"
"தமிழ் வாழ்க!" 
"பெரியார் வாழ்க!"
"பாரத் மாதா கீ ஜே!"
"ஏர்ஸ்ட ஆன்ஸ மென்ஸன்"
"காவேரி நம்மது"
கோஷங்கள் எந்த மொழியில் கத்தப்பட்டாலும்
அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன
நானொரு எளிய மனிதன்
கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கூட்டத்துக்கு எதிரிலும்
ஒரு எளிய மனிதன்
பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறான்
அவன் என்னைப் போன்றவன்
எளிய மனிதர்களின் மீதான
கூட்டங்களின் தாக்குதலே இந்தக் கோஷங்கள்
அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..