ஏ ழாவது சொர்க்கத்தின் எல்லையில் "ஸித்ரத்துல் முன்தஹா" என்கிற "ஷஜாரா" இருக்கிறதாம். ஸித்ரத்துல் முன்தஹா என்றால் எல்லையின் முடிவில் இருக்கும் இலந்தை மரம். ஷஜாரா என்றால் பெருவிருட்சம். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் சூழ அமைந்த அந்த பெருவிருட்சத்தின் வேர், ஆறாம் சொர்க்கம் வரை நீள்கிறதாம். வேர்ப் பகுதியிலிருந்து ஸல்ஸபீல், கவ்ஸர், நைல், யூப்ரடீஸ் ஆகிய நான்கு பெருநதிகள் உற்பத்தியாகின்றதாம். விருட்சத்தின் இலைகள் யானைகளின் காதுகளை ஒத்ததாகவும், அதன் இலந்தைப் பழங்கள் பெரிய கூஜாக்கள் போலவும் இருக்குமாம். மரத்தைச் சுற்றிலும் எப்போதும் தங்கத்தினாலான வெட்டுக்கிளிகள் பறந்துகொண்டே இருக்குமாம். ஸித்ரத்துல் முந்தஹாவைத் தாண்டி யாருமே செல்ல முடியாதாம். பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் உயிரினங்கள், அவற்றின் செயல்களைப் பற்றிய குறிப்புகள் யாவும் இறுதியில் இந்த விருட்சத்தைத்தான் சென்றடைகின்றன. அதே போல மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் இறைக்கட்டளைகளும் இங்குதான் வந்தடைகின்றன. இவை இரண்டுமே வானவர்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்று ஒரு ஹதீஸ் சொல்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான செய்
அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றிடன் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
பதிலளிநீக்குநன்றி.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
அன்புள்ள முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களுடைய 'சொல்லேருழவர்களில் ஒருவனாக' இந்தச் சிரியோனையும் சேர்த்து என் வலைத்தளத்தைப் பற்றி எழுதி பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றிச்செண்டு!!! 'சொல்லேருழவர்' என்கிற அழகிய சொல்லை பயன்படுத்தியதற்கு இன்னுமொரு நன்றி!!
வாழிய நலம்!