ஏ ழாவது சொர்க்கத்தின் எல்லையில் "ஸித்ரத்துல் முன்தஹா" என்கிற "ஷஜாரா" இருக்கிறதாம். ஸித்ரத்துல் முன்தஹா என்றால் எல்லையின் முடிவில் இருக்கும் இலந்தை மரம். ஷஜாரா என்றால் பெருவிருட்சம். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் சூழ அமைந்த அந்த பெருவிருட்சத்தின் வேர், ஆறாம் சொர்க்கம் வரை நீள்கிறதாம். வேர்ப் பகுதியிலிருந்து ஸல்ஸபீல், கவ்ஸர், நைல், யூப்ரடீஸ் ஆகிய நான்கு பெருநதிகள் உற்பத்தியாகின்றதாம். விருட்சத்தின் இலைகள் யானைகளின் காதுகளை ஒத்ததாகவும், அதன் இலந்தைப் பழங்கள் பெரிய கூஜாக்கள் போலவும் இருக்குமாம். மரத்தைச் சுற்றிலும் எப்போதும் தங்கத்தினாலான வெட்டுக்கிளிகள் பறந்துகொண்டே இருக்குமாம். ஸித்ரத்துல் முந்தஹாவைத் தாண்டி யாருமே செல்ல முடியாதாம். பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் உயிரினங்கள், அவற்றின் செயல்களைப் பற்றிய குறிப்புகள் யாவும் இறுதியில் இந்த விருட்சத்தைத்தான் சென்றடைகின்றன. அதே போல மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் இறைக்கட்டளைகளும் இங்குதான் வந்தடைகின்றன. இவை இரண்டுமே வானவர்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்று ஒரு ஹதீஸ் சொல்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான செய்
பதிலளிநீக்குபிற மதத்தவர்க்கு அனுமதி இல்லை
அனைத்து ஆலயங்களிலும்.
அனைத்து ஆலயங்களுக்கும் செல்ல
மறுக்கும் நாத்திகர் உண்டு!
செல்லத் தேவையற்ற
ஞானிகள் உண்டு!
ஒவ்வோர் பக்குவ நிலைகளில் ஒவ்வொருவரும்!
கோவிலில் பிறக்கலாம்
ஆனால் இறக்க்கூடாது
என்பது அமிர்தானந்தமயி
அன்னை வாக்கு.
ஆம். தன் கோவில் கருவறைக்குள் நுழைந்தவனும்...புரிந்துகொள்கிறான் அங்கும் அவர் இல்லை என்பதை...
பதிலளிநீக்குVery thoughtful one, which can't be debated!
பதிலளிநீக்கு