ten months ago, you wrote...

மேற்படி பொருளுடன் 'Your Journal Awaits' என்று பென்சுவிலிருந்து (Penzu) கடந்த மாதம் 26-ஆம் தேதி வந்திருந்த மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். உடனே பென்சுக்கு சென்று என்னுடைய நாட்குறிப்பேட்டை சற்று நேரம் புரட்டிவிட்டு, மார்ச் மாதம் 26-ஆம் தேதி எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்தேன். 'பார்வை' என்று தலைப்பும் வைத்திருக்கிறேன். 

(பென்சு நாட்குறிப்பேட்டிலிருந்து..)
இதை எழுதியதற்கு இரண்டு மாதங்கள் கழித்து, என் மனைவி, மகனுடன் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்றிருந்தபோது இந்தக் காட்சி நினைவுக்கு வந்ததால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து என்னைச் சுற்றி நடப்பதையெல்லாம் 'கேட்டுக்கொண்டிருந்தேன்' - வானவில் உட்பட. அன்று மாலை நாட்குறிப்பில் எதுவும் எழுதவில்லை. 'நிறங்கள்' கதையை எழுதி வல்லமைக்கு அனுப்பிவிட்டேன். அதுவும் ஒரு 26-ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது.

நிறங்களிலிந்து சில வரிகள்:

"காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசி முறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக் கச்சேரிதான்!
அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்து கொண்டது சிறு தூறல்! அதன் விளைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த மிதம், அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும் யாருக்குப் பிடிக்கும்? மிதம்தான் இதம்."

இதைக் கதை என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. எதோ தோன்றியதை எழுதினேன். Thoughtful response. அவ்வளவே. ஆனால், அதை வாசித்த ஒருவருக்கு பிடித்திருப்பது நிறைவளிக்கிறது.

திரு. மோகன் துரைசாமி அவர்கள் 'நிறங்கள்' பற்றி முகநூலில் எழுதியது:

"கண் பார்வை இல்லாததால், தன் காதுகள் மற்றும் உணர்வின் மூலம் மட்டுமே இந்த உலகைப் பார்த்து வரும் ஓர் மாற்றுத்திறனாளி, உள்ளங்கவரும் இயற்கையின் மாலை நேரம், பறவைகளின் கானங்கள், இளந்தூறலின் மென்மை, வர்ணஜாலம் காட்டும் வானவில் போன்றவற்றை ஏக்கம் கலந்த நிராசையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வித்தியாசமான கற்பனை முலம் வெளிப்படுத்தும் கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.. தொடர்ந்து நிறங்கள் பக்கம் தன் நினைவலைகளை திருப்பும் அந்த மாற்றுத்திறனாளி, பிடித்த நிறம் பிடிக்காதவை என்று வரிசைப்படுத்தி, பச்சை நிறம் என்றால் மகிழ்ச்சி,, சிவப்பு என்றால் கோபத்தைக் குறிக்கும் என்று ஒவ்வொரு நிறத்தையும் சோகம், பயம், வெறுப்பு, வியப்பு என்று ஒவ்வொரு உணர்ச்சியுடன் வகைப்படுத்துகிறார்.. அவரால் பார்க்க முடிந்த ஒரே நிறம் கருமைதான் என்ற வரிகள், இறைவா யாரும் கண்ணில்லாமல் பிறக்க வேண்டாம் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவித்தது."

ஏற்கனவே 'முடி' சிறுகதை பற்றி அவர் முகநூலில் எழுதியிருந்ததையும் இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன்:

அவருக்கு என்…



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..