வார்லி ஓவியம்

தி ஹிந்து தமிழ் இதழின் சுவர் ஓவியம் கட்டுரைத் தொடரில் கடந்த வாரம் 'வார்லி ஓவியம்' பற்றிய சுவையான செய்திகளை வாசித்தேன். இந்த ஓவியக்கலை மகாராட்டிரம் குஜராத் மாநில எல்லைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினரான வார்லி மக்கள் உருவாக்கி வளர்த்த ஓவியக்கலை. மனிதன் குகைகளில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை ஓவியங்களாக வரைய முற்பட்டு உருவானதே இந்த ஐயாயிரம் வருடங்கள் தொன்மையான ஓவியக்கலை.
வார்லி பழங்குடியினர் தங்களுடைய மண்சுவர்களில் காவி வண்ணம் பூசி அதன் பின்புலத்தில் அரிசி மாவைத் தண்ணீரில் குழைந்தது உருவாக்கிய வெள்ளை பூச்சில் ஓவியங்கள் வரைவார்களாம். பெண்களால் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் அவர்களின் அன்றாடப் பணிகளே இடம்பெற்றிருகின்றன. சூரியனுக்கு வட்டம், மலைகளுக்கு முக்கோணம், வண்டிகளுக்கு சதுரம், செவ்வகம் என்று இந்த ஓவியங்கள் பெரும்பாலும் அடிப்படை வடிவங்களைக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. தெய்வ உருவங்களையோ, மதச் சடங்குகளையோ காண முடியவில்லை என்பது மற்றொரு சிறப்பு.
இங்கே இணைப்பில் நான் பகிர்ந்திருப்பது என் தோழி வரைந்த வார்லி ஓவியம். பிறந்த நாள், திருமணம், இதர பிற விழாக்களில் கடிகாரம், பிளாஸ்டிக் பூக்கள், விளக்கு போன்ற வழக்கமான அன்பளிபபுகளைத் தருவதற்கு பதிலாக இதுபோன்ற ஓவியங்களை தருவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இந்தியப் பழங்குடியினரின் சுவர்களை அலங்கரித்த ஐந்தாயிரம் வருட தொன்மையான ஓவியங்கள் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது.


வாழ்த்துக்கள் கீர்த்திகா. தொடருங்கள்.

(முகநூல் பதிவு: 24 ஏப்ரல் 2016)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..