செஹோவின் துப்பாக்கி
ஞா யிறன்று மாலை ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்ப்பது நிச்சயமாக நேர விரயம் என்பதால் என்ன திரைப்படம் என்று சொல்ல விரும்பவில்லை. அதில் ஒரு வருமானவரித் துறை அதிகாரி தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று திடீர்ச் சோதனை செய்யும் காட்சியைப் பார்க்கும்போது என்னுடைய மகனிடம், "அந்த ஏர்கூலரில்தான் பணம் இருக்கிறது" என்றேன். நான் சொன்னது போலவே பணம் அதில்தான் இருந்தது. என் மகனுக்கு ஒரே வியப்பு. "எப்படிப் பா கண்டுபிடிச்ச?" என்றான். "ஏர் கூலர் வர ஃப்ரேமை வழக்கத்தைவிட அதிக நேரம் காட்டினார்கள் அறிவாளிகள். அதனால் அது நிச்சயம் அடுத்த காட்சியில் மீண்டும் வரப் போகிறது என்று யூகிப்பது எளிது." என்று கூறிவிட்டு, "உன்னைப் போன்று கதைகள் எழுதுபவர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய யுத்தி ஒன்று இருக்கிறது சொல்லவா? செஹோவ்ஸ் கன் ப்ரின்சிபிள்." என்றேன். "ஷூர் பா. சொல்லு." திரைப்படம் முடிந்த பிறகு அவனுக்கு அதை விரிவாக விளக்கினேன். "ஆன்டோன் செஹோவ்" ஒரு தலைசிறந்த சிறுகதை ஆசிரியர். இலக்கிய உலகில் எட்கர் ஆலன் போவை