பொறாமை எனும் நஞ்சு..
க டந்த வாரம் நான் எழுதிப் பதிவிட்டிருந்த " புறங்கூறாமை எனும் அறம் " பதிவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வழியாகவும் பல நண்பர்கள் பாராட்டிச் செய்தி அனுப்பி இருந்தார்கள். ஒரு சிலருக்கு உடனே பதிலனுப்பிவிட்டேன். ஆனால், தொடர்புகொண்ட அனைவருக்குமே உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் எடுத்து பதில் அளிக்க விழைவதும் ஒரு காரணம். ஒரு சிலர், "சுய மேன்மை" (personal excellence) சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதுதான் சிறந்தக் கட்டுரை என்றார்கள். உண்மையிலேயே மனநிறைவு அளிக்கும் சொற்கள் இவை. நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவாயினும், அதை ஒரு வசைக் கட்டுரையாகவும் பலர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால் அதற்கு மாறாக, வந்துகொண்டிருக்கும் எதிர்வினைக ள் எனக்கு உவகையளிப்பதாகவே உள்ளது; மனதில் நம்பிக்கைப் பிறக்கிறது; புத்தொளி பாய்ச்சுகிறது. என்னையும், என்னுடைய செயல்களையும் தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவங்...