கடவுளும் சாத்தானும்
ஐ ரோப்பாவுக்குள் எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் பெரும்பாலும் காரில் செல்வதே என் வழக்கம். மதிய உணவு முடித்துவிட்டு பெல்ஜியத்திலிருந்து கிளம்பினால், இடையே ஜெர்மனியில் தேநீர் பருகிவிட்டு, பிரான்சு நாட்டைக் கடந்து மாலை உணவுக்கு சுவிட்ஸர்லாந்துக்கே சென்று விடலாம். மேலும் எனக்கு காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் உறவுகளோடு சுற்றுலா சென்றுவிட்டு கடைசி நாள் வீடு திரும்பும் போது, "ஊர் செல்ல இன்னும் எவ்வளவு கிலோமீட்டர்கள்?" என்று எங்களுடைய சாரதி பாஸ்கர் அண்ணாவைக் கேட்டுக்கொண்டே வருவேன். தூரம் குறையவே கூடாது என்றும் வேண்டிக்கொள்வேன். எனக்கு ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால்தான் இயற்கையில்கூட குளம் குட்டைகளைவிட, ஓடை ஆறு இவற்றின் மீதே எனக்கு அதிக ஈர்ப்பு. குளம் குட்டைகளில் அழுக்குகள் எளிதாகத் தங்கி விடும். யாராவது சுத்தம் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது. அழுக்கை அண்ட விடாது. பயணங்களின் போது வண்டி உருண்டு ஓடிக்கொண்டே இருக்க, மனதில் பல விதமான சிந்தனைகள் என் முன் வந்து கொட்டிக்கொண்டே இருக்கும். அப்போது மட்டும் எனக்கு...