அம்மாவின் காமெடிகள் (2)
“ஹலோ..”
“சொல்லு மா”
“சாப்டியா கண்ணா?”
“இந்தியத் தாய்மார்களுக்கு வேற கேள்வியே கேட்கத் தெரியாதா?”
“சரி.. அத விடு. நாம பேசினத பேஸ்புக்ல போட்டுட்டியாமே. நாட்டு நிலவரமே சரியில்ல. நமக்கு எதுக்கு பா வம்பு?”
“நீ கோட்ஸேவ பத்தி நல்லவிதமா சொன்னதாதான மா போட்டேன். அப்புறம் என்ன பிரச்சின? உன் பாஷைல சொல்லணும்னா, காந்திய திட்டினா இந்த அகிம்ச புடிச்ச பயல்களுக்கு கோவமா வரப் போவுது?”
“எதுக்கு பா பிரச்சின. நீ வேணும்னா இப்படி மாத்தி எழுதிடு..”
“எப்படி?”
“காந்தியைக் கொன்றது ஒரு ஆண்”.
கருத்துகள்
கருத்துரையிடுக